Monday, January 20, 2014

தீயனவற்றை பார்க்காதே













(Pic - Internet)


நீதிதேவதையின்
கட்டப்பட்ட கண்கள் -
நடுநிலைமை என்கிறார்கள்!
இருந்தும்,
கண்கள் மூடிய
குரங்குதான்
நினைவுக்கு வருகிறது!

எங்களுக்கு என்ன குறை














(Pic -Internet )


அழகான பூக்களின் பட்டியல்.
ரோஜாக்களுக்கும்
லில்லிகளுக்கும்
முன்னுரிமை.
பாவம்,
புசிப்பவர் கூட ரசிக்காமல்...
முருங்கைப்பூக்களும்
மாம்பூக்களும்